பொங்கல் முன்னிட்டு ரூ.1.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

 
பாவூர் சத்திரம் ஆட்டுச்சந்தை


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களைக்கட்ட துவங்கியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஆட்டுச் சந்தைகளில் ஆடுகள்  விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள்  ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்று பெரும்பாலான தமிழர்களின் இல்லங்களில் இறைச்சி உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுவது வழக்கம். அன்றைய தினம் ஒவ்வொரு ஊரிலும் இதற்காக ஆட்டு இறைச்சிக் கடைகள் முளைக்கும். ஆட்டு இறைச்சி மற்றும் கோழி, மீன் இறைச்சி கடைகளில் கும்பல் அலைமோதும்.

ஆட்டு சந்தை ஆடு ரம்ஜான் ரமலான் பக்ரீத்


அன்றைய தினம் பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்காக ஆடுகளை வாங்கும் பணியில் கடந்த ஒரு வாரமாகவே  இறைச்சிக் கடைக்காரர்கள், ஆட்டு வியாபாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்டுச் சந்தைகளில் கூட்டம் ஏராளமாக குவிந்து விற்பனை அமோகமாக உள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் இன்று அதிகாலை நடைப்பெற்ற ஆட்டுச் சந்தையில் 1.5 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல ஆரணி கேளூர் மாட்டுச்சந்தையில் 2 கோடிக்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்மாடியோவ்! ஒரு ஜோடி ஆடு ரூ.1.30 லட்சம்!


தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில்  வியாழக்கிழமை கூடிய ஆட்டுச் சந்தையில் சுமார் 2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனை நடந்ததாகவும்,  ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரிகள் கூறுகின்றன.  மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில்  மட்டும் 5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை நடை பெற்றுள்ளது. ஆடு ஒன்று ரூ.13 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.  இதுபோல நேற்றும், இன்றும் பல்வேறு ஊர்களிலும்  நடைபெற்ற வார சந்தைகளில் பல கோடி ரூபாய்க்கும்மேல் ஆடுகள் விற்பனை நடந்துள்ளது.  ஆடுகளுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை கிலோ  ஆயிரம் ரூபாய் வரையிலும்  விற்கப்படும் ஆட்டு இறைச்சியின் விலை மாட்டுப் பொங்கல் தினத்தில்  மேலும் அதிகரிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

From around the web