இன்று தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!! ரிசர்வ் வங்கி!!

 
இன்று தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!! ரிசர்வ் வங்கி!!

மத்திய அரசு தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் வகையில் 2015 நவம்பரில் முதல் தங்க சேமிப்பு பத்திரங்களை அறிமுகம் செய்தது. இதன் மூலம் தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்க முடியும். குறைந்த பட்சம் 1 கிராம் முதல் இதில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். மத்திய அரசு இந்த தங்க சேமிப்பு பத்திரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 7 கட்ட தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப் பட்டுள்ளன.

இன்று தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!! ரிசர்வ் வங்கி!!

இன்று எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திரம் வெளியிடப்பட உள்ளது. தற்போதைய நிலவரப்படி தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 4,791 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்தகவலை ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு டிசம்பர் 3 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை பத்திர வெளியீட்டுக்கு முன் 3 வர்த்தக தினங்களின் சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.


மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடியும் உண்டு. ‘கிரெடிட், டெபிட்’ கார்டுகளில் சேமிப்பு பத்திரங்களை வாங்குபவர்கள் 1 கிராம், 4,741 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் மூலம் இந்த தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இன்று தங்க சேமிப்பு பத்திரம் வெளியீடு!! ரிசர்வ் வங்கி!!


மத்திய அரசு, தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக,.கடந்த ஏழாவது தங்க பத்திர வெளியீட்டின்போது, விலை 1 கிராமுக்கு 4,761 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.அதிகபட்சமாக, தனிநபர்கள் 4 கிலோ வரையும், அறக்கட்டளைகள் மூலம் 20 கிலோ வரையும் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web