சென்னையில் ஏசி மின்சார ரயில்கள்... தயாரிப்பு பணி நிறைவடைந்தது!!

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குட் நியூஸ். மெட்ரோ ரயிலைப் போலவே சென்னையிலும் மின்சார ஏசி ரயில்கள் தயாராகி வருகிறது.
சென்னையின் முதல் புறநகா் ஏசி மின்சார ரயில் தயாரிப்புப் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் எல்எச்பி ரயில் பெட்டிகள், வந்தே பாரத் மற்றும் மின் ரயில்களின் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்நிலையில், மும்பை புறநகா் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் ஏசி வசதியுடன் இயக்கும் வகையில் பெட்டிகள் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்படுகின்றன.
இதற்கு தெற்கு ரயில்வே உட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்துக்கும் நடப்பு நிதியாண்டில் ஒரு ஏசி மின்சார ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தயாரிப்புப் பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் நடந்து வந்த நிலையில், தற்போது முழுவதுமாக பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனைத் தொடா்ந்து ரயில் இயக்கம் குறித்து ஐசிஎஃப் அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்து வருகின்றனா்.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் முழுவதும் ஏசி வகுப்பு பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் ஐசிஎஃப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டு தெற்கு ரயில்வேக்கு ஒரு ரயில் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில் தயாரிப்பு பணி முடிவடைந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்த பின் எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!