விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்... மீண்டும் செக்-இன் பேக்கேஜ் வரம்பு அதிகரிப்பு!

 
செக் இன் பேக்கேஜ்
ஏர் இந்தியாவின் துணை நிறுவனம் ஏர்_இந்தியா_எக்ஸ்பிரஸ். இந்நிறுவனம் சமீபத்தில்  சர்வதேச பயணிகளுக்கு செக்-இன் பேக்கேஜ் வரம்பை குறைத்திருந்தது. தற்போது  இதனை மீண்டும் உயர்த்தி உள்ளதாக  விளம்பரங்கள் மூலம் அறிவித்துள்ளன.  அந்த வகையில் அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லும் பயணிகளுக்கு, 30 கிலோ செக்-இன் பேக்கேஜ் வழங்கப்பட்டது.

செக் இன் பேக்கேஜ்

அது சமீபத்தில் 20 கிலோவாக குறைக்கப்பட்டு இருந்தன. இதை மீண்டும் 30 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.  குழந்தைகளுடன் செல்லும் பயணிகள் 30+10 கிலோ வரை கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதனைத்தொடர்ந்து, சர்வதேச வர்த்தக பயணிகளுக்கு, 40 கிலோ வரை செக்-இன் பேக்கேஜ் கொண்டு செல்லலாம். கேபின் பேக் பொறுத்தவரை, இரண்டு பேக் வரை கொண்டு செல்லலாம்.  எடை 7 கிலோவுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.

செக் இன் பேக்கேஜ்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவில் உள்ள பல நகரங்களுக்கு வாரம் 450 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.  இதேபோல் சிங்கப்பூரில் இருந்து   சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை  நகரங்களுக்கு வாரம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web