குட் நியூஸ்! நாளை முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!!
Jul 25, 2021, 17:31 IST
இந்தியாவில் கொரோனா 2வது அலை தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிப்புக்களின் அடிப்படையில் மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தை பொறுத்துவரை பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், பார்கள் இன்னும் திறக்கப்படவில்லை.
அண்டை மாநிலமான கர்நாடகாவில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் நாளை முதல் திரையரங்குகள் திறக்கலாம் என அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் நாளை முதல் இயங்கலாம். அத்துடன் மெட்ரோ ரயில், பேருந்துகள் 100% இருக்கைகளுடன் இயங்கவும் டெல்லி அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
From around the
web