அரசுப் பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்து... 30 பயணிகள் படுகாயம்!

 
விபத்து

திருச்சி மாவட்டம் லால்குடி  மேட்டுப்பட்டியிலிருந்து அரசு பேருந்து  ஒன்று இன்று காலை 6.30 மணிக்கு சென்று கொண்டிருந்தது. திடீரென பேருந்து  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் இருந்த வயலில் தலைக்குப்புறக் கவிழ்ந்து கோர விபத்து ஏற்பட்டது. இந்தப் பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.  

விபத்து

இதில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்கள்  லால்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்   இருவர் கவலைக்கிடமான நிலையில் முதலுதவி அளிக்கப்பட்டு  மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த  விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web