போதை ஒழிப்பு மையத்தில் அரசு மருத்துவரின் மகன் மரணம்.. கை, கால்களை கட்டி செய்யப்பட்ட கொடூரம்!

 
போதை ஒழிப்பு மையம்

கரூரைச் சேர்ந்த அரசு மருத்துவர் பிச்சைமுத்து என்பவரின் மகன் கிஷோர். இவர் கோவையில் உள்ள கல்லூரியில் பிபிஏ படித்து வந்தார். இதற்கிடையில், கிஷோர் போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மறுவாழ்வுக்காக கோவில்பாளையத்தில் உள்ள உதவும் கரங்கள் போதை ஒழிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.

மீட்பு மையத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மாணவர், கிஷோர் வீட்டுக்குப் போவதாக வெறித்தனமாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இதனால், மீட்பு மைய ஊழியர்கள் கிஷோரின் கை, கால்களை கட்டி, வாயில் துணியை போட்டுள்ளனர். இதனால் மூச்சு திணறி மாணவர் உயிரிழந்தார்.

இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மையத்தின் வார்டன் அரவிந்த் ஹரி, உளவியல் நிபுணர் ஜவா பிரசன்னராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web