பெரும் பரபரப்பு.. குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து.. தீயணைக்க போராடி வரும் தீயணைப்பு வீரர்கள்!

 
வெள்ளலூர் தீ விபத்து

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் தினமும் சேகரமாகும் குப்பை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அந்த வகையில் லட்சக்கணக்கான குப்பைகள் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிந்து கிடக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதே சமயம், ஹிட்டாச்சி, பொக்லைன் வாகனங்கள் மூலம் குப்பைகளை கொண்டு சென்று தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மீட்பு படையில் இருந்து தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார ஊழியர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு ஆளில்லா விமானங்கள் மூலம் தீயை கண்காணித்து வருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்