பெரும் பரபரப்பு... பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த பாம்பு பிடி வீரர்!

சேலம் மாவட்டம் ஓமலூர் பெரியகாடம்பட்டியில் வசித்து வருபவர் சிவப்பிரகாசம். இவர், நெசவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பாம்பு பிடிக்கும் தொழிலையும் செய்து வருகிறர். இவர், இதுவரை 3500-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார். இந்நிலையில், தாரமங்கலத்தில் மரக்கடையில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது, சிவப்பிரகாசத்தை பாம்பு கடித்துவிட்டது.
இதையடுத்து உடனடியாக பாம்பை பிடித்து பையில் போட்டுக் கொண்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அத்துடன் 108 ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த சிவப்பிரகாசத்தை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறிது நேரத்தில் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் பரபரப்பானதை அடுத்து பாம்பை மருத்துவமனைக்கு வெளியே வைத்துவிட்டனர். சிகிச்சைக்காக சிவப்பிரகாசத்தை மருத்துவமனைக்குள் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பை மீட்டுச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!