பெரும் சோகம்... 6 வது மாடியில் இருந்து 4 வயது சிறுவன் தவறி விழுந்து பலி!

தமிழகத்தின் தலைநகர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் வசித்து வருபவர்கள் திலீப் - சுவாதி தம்பதியர். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் 4 வயதில் துருவன் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. இந்நிலையில், இன்று சுவாதியின் தந்தை மற்றும் தாயாரை பார்ப்பதற்காக கோயம்பேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
இதையடுத்து 6வது மாடியில் உள்ள இவர்களது வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது உள்ளே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துருவன், திடீரென ஜன்னல் வழியாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துகொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்
இச்சம்பவம் குறித்து சிஎம்பிடி போலீசார், வழக்குப் பதிவு செய்து உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!