பெரும் சோகம்... ஏரியில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை!

 
சேத்தன்

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் வசித்து வருபவர் சரணப்பா. இவரது மகன் சேத்தன் (23). தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் சேத்தனுக்கு ஆரம்பம் முதலே படிப்பில் அதிகளவில் ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது. அதே சமயம் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்ட சேத்தன், தினமும் மாலை நேரங்களில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கால்பந்து விளையாடுவதற்காக சென்று விடுவது வழக்கம்.

தினமும் இது குறித்து கண்டித்து, சொல்லி பார்த்தும் சேத்தன் கேட்கவில்லை. இதனையடுத்து  தந்தை சரணப்பா கொட்டிஹாலா வழக்கம் போல விளையாட செல்வது குறித்து சேத்தனை கண்டித்துள்ளார். கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறும்வரை கால்பந்து விளையாட போகக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஏரி

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான சேத்தன்   கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சேத்தனை பல இடங்களில் தேடி பார்த்தனர்.  நண்பர்களிடம் விசாரித்தும்  எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தந்தை போலீசில்  புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சேத்தனை தேடி வந்தனர். 

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் நேற்று முன்தினம் கெலகெரே ஏரியில் ஒரு இளைஞரின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற   போலீசார் இளைஞரின்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதே நேரத்தில் அதுவரை மாயமாகி இருந்த  கால்பந்து வீரர் சேத்தனின்  உடல் என  தெரியவந்தது. மே தந்தை திட்டியதால் சேத்தன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

 லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

 

From around the web