பெரும் சோகம்... 2 மகன்களை கொன்று தாயும் தற்கொலை!

 
சசி

அழகழகான ரெண்டு குழந்தைகள். அந்த குழந்தைகளைக் கொல்வதற்கு எப்படித் தான் மனசு வந்ததோ என்று இன்னும் இறந்து போன குழந்தைகளைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பரமத்திவேலூர் பகுதி  மக்கள். நாமக்கல் மாவட்டம் வெட்டுக்காட்டுப்புத்தூர் பகுதியில் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசி கொன்று விட்டு, அதே கிணற்றில் தாயும் குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் இன்னும் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை பரப்பியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், வெட்டுக்காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் விவசாயி தனசேகரன்(30). இவரது மனைவி சசிகலா (26). இவர்களுக்கு திவித் (5), தர்ஷன் (3) என்று இரு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மீண்டும் வழக்கம் போல இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த சசிகலா, அடுத்த நாள் காலை 6 மணியளவில் குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியேறினார்.

வணிவரித்துறை  உதவியாளர்  தற்கொலை

அங்கு தனசேகரன் மட்டும் தூங்கி கொண்டிருந்தார். சசிகலா மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதனால் திடுக்கிட்ட அவர், வெளியே வந்து மகள் மற்றும் பேரப்பிள்ளைகளை தேடினார். முதல் நாள் இரவு கணவன் - மனைவிக்கிடையே நடந்த தகராறு குறித்து கேள்விப்பட்ட சசிகலாவின் தந்தை பழனிசாமி, அதிகாலை 6.30 மணிக்கு மகள் வீட்டிற்கு சமாதானம் பேச சென்றுள்ளார்.  அப்போது, தனசேகரனின் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே சென்ற போது, அங்கு சசிகலாவின் செருப்பு கிடந்தது.

இதனால், சந்தேகமடைந்த அவர், கிணற்றில் எட்டி பார்த்த போது, அங்கு குழந்தைகள் திவித், தர்ஷன் ஆகியோர் சடலமாக மிதந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக வீட்டிற்கு சென்று மருமகன் மற்றும் உறவினர்களுக்கு தகவல் அளித்தார். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களின் உதவியுடன், கிணற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் சசிகலாவின் சடலங்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

Nallore PS

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நல்லூர் போலீசார், 3 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப தகராறில் மனமுடைந்த சசிகலா, குழந்தைகள் இருவரையும் கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சசிகலாவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால், வரதட்சணை கொடுமை எதுவும் காரணமா? என திருச்செங்கோடு ஆர்டிஓ ரமேஷ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web