பெரும் சோகம்... 3 வயது குழந்தை பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி!

 
3 வயது குழந்தை பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து பலி
தமிழகத்தில் மதுரை கே.கே.நகர் பகுதியில்  குடியிருப்பு பகுதியில் தனியார் மழலையர் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஏப்ரல் 29ம் தேதி அங்கு படித்து வரும்  3 வயது குழந்தை ஆரூத்ரா பள்ளியின் பின்புறம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்த 12 அடி ஆழமுள்ள மூடப்படாத தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்தது. இதனையடுத்து உயிருக்கு போராடிய குழந்தையைக் கண்ட பள்ளி ஊழியர்கள் உடனடியாக மீட்டு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பந்தப்பட்ட மழலையர் பள்ளிக்கு மதுரை மாநகர தெற்கு ஆணையர் தலைமையில் தல்லாக்குளம் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து  அப்பள்ளியின் உரிமையாளர் திவ்யாவை போலீசார் கைது  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web