தமிழகத்தில் அதிகரிக்கும் வன்முறை... என்ன தான் நடக்குது?! துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்...பதற்றத்தில் மக்கள்!
தமிழகத்தில் சமீப காலங்களாக வன்முறை சம்பவங்களுக்கும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அரசியல் கொலைகள், கொலை மிரட்டல்களும் அதிகரித்து வருவது பொதுமக்களை பதற்றமடைய செய்துள்ளது.
பகுஜன் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்குப் பின்னர், அடுத்தடுத்து நான்கைந்து அரசியல் கட்சி பிரமுகர்கள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர். கொலை நகரமாக தமிழகம் மாறி வருகிறதா என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கே கொலை மிரட்டல் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் கடந்த ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் துரை தயாநிதி. வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் 4 மாதங்கள் சிகிச்சை பெற்று வந்த இவர், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்குள்ள ஏ-பிளாக்கில் பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிஎம்சி மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளருக்கு நேற்று (ஆகஸ்ட் 10) மிரட்டல் கடிதம் வந்தது. கடந்த ஆண்டு முதல் அவர் தொடர்ந்து மருத்துவமனைகளில் சிகிச்சையில் தான் இருந்து வருகிறார்.

வெளிநபர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை. எந்த பொது நிகழ்விலும் கலந்துக் கொள்ளவும் இல்லை. இந்நிலையில், துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அந்த மின்னஞ்சல் முகவரியை ஆய்வு செய்து வருகின்றனர். மிரட்டல் மின்னஞ்சல் காரணமாக துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஏ பிளாக்கில் போலீஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
