பெரும் சோகம்.. மக்கள் சேவைக்கு சென்ற கல்லூரி மாணவர் உயிரிழப்பு !!

 
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த ஆலம்பாடி கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சென்னை லயோலா கல்லூரியில் இருந்து 67 மாணவ மாணவிகள் வந்து தங்கி, இப்பகுதி கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

நேற்று மாலை ஆலம்பாடி தொண்டு நிறுவனத்திலிருந்து வடகரை தாழனூர் கிராமத்தில் விழிப்புணர்வு நாடகம் போடுவதற்கு, 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சரக்கு வாகனத்தில் சென்றுள்ளனர்.

விழுப்புரம்

சரக்கு வாகனம் கடகனூர் அருகே உள்ள வளைவு சாலையில் செல்லும்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில், கல்லூரி மாணவன் சாமுவேல் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும்,  வாகனத்தில் பயணித்த 20 மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அனைவரும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

விழுப்புரம்

இந்த விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் போதிய மின் விளக்குகள் மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

From around the web