எனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருப்பதை நிரூபித்தால் 50% பங்குகளை இலவசமாக எழுதித் தருகிறேன்... ஜிஸ்கொயர் நிறுவனர் பகிரங்க சவால்!

 
sabarisan

 

சட்டப்பேரவையில் ஆதாரமின்றி ஜி ஸ்கொயர் நிறுவனம் குறித்து பேசியவர்களுக்கு ஆதாரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அந்நிறுவனத்தின் நிறுவனர் பாலா ராமஜெயம், தனது நிறுவனத்தின் மதிப்பு ரூ.10,000 கோடி என்றும், ரூ.2,300 கோடி கடன் இருப்பதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

தனக்கும் சபரீசனுக்கும் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டுவோர் அதனை நிரூபித்தால், தனது நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை இலவசமாக எழுதித் தருவதாக அவர் பகிரங்க சவாலும் விடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் வணிக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிறுவனத்தின் மீதான புகார்களுக்குச் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இது தொடர்பான அடுத்தடுத்த நகர்வுகள் மற்றும் விளக்கங்கள் குறித்த எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.