அதிர்ச்சி!! ஜிம் மாஸ்டர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு.. !!

 
ஆகாஷ்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் சபரி முத்து என்கின்ற ஆகாஷ் (25). நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். ஆகாஷ் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்றுள்ளார். இதனால் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார்.

ஆகாஷ்

இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இரண்டு கிட்னியும் செயல் இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து  தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த ஆகாஷ் சிகிச்சைப் பலனின்றி உயிர் இழந்தார்.

இதனால் ஆகாஷ் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தவருக்கு ஏன் இந்த நிலை என பலரும் ஆத்திரம் அடைந்தனர். ஆகாஷ் 26 ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற கடுமையாக உடற்பயிற்சி வந்தார். ஆனால் 22 ஆம் தேதி உயிரிழந்தார்.

ஆகாஷ்

போலீசார் விசாரணையில், ஆகாஷ் உடல் அமைப்பை கூட்டி கட்டுக்கோப்பாக கொண்டு வர சீராய்டு ஊசி செலுத்தியது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து சபரி முத்து உயிர் இழந்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

From around the web