ஸ்கூல் டூர்... நண்பருடன் உல்லாசம்.. கர்ப்பமடைந்த மாணவியின் கரு கலைப்புக்கு உதவிய டாக்டர் கைது!
பள்ளி மாணவி ஒருவர், ஸ்கூல் டூர் சென்ற இடத்தில், நண்பருடன் உல்லாசமாக இருந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த 17 வயது மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தெரியாமல் இருக்க கர்ப்பத்தைக் கலைக்க முடிவு செய்திருந்த மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த டாக்டரிடம் ஆலோசனை நடத்தி மருந்துக் கடையில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கியுள்ளார்.
ஆனால் மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரது பெற்றோர் அவரை மீட்டு கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறமி என்பதால் மருத்துவமனை நிர்வாகம் கூடலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தது. அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில் மாணவியின் உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக அவர் ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையறிந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவின் பேரில் மருத்துவப் பணிகள் துணை இயக்குநர் பரமேஸ்வரி தலைமையில் கூடலூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சுரேஷ், மருந்து ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவியிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
அப்போது கூடலூரை சேர்ந்த மருந்து கடை உரிமையாளர் அகமது அன்சாப் என்பவர் கர்நாடகாவில் இருந்து கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி வந்து மாணவிக்கு விதிகளை மீறி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் மருந்து கடைக்கு சீல் வைத்தனர். கருக்கலைப்பு மாத்திரையை பரிந்துரைத்த மருத்துவர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பள்ளி மாணவிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக நரேந்திர பாபு என்ற மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
பள்ளிக்கு சுற்றுலா சென்ற போது ஆண் நண்பருடன் தனியாக இருந்த மாணவி கர்ப்பமாகி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் இருவர் மீதும் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!