ஹரியானா முதல்வர் ராஜினாமா... புதிய முதல்வராக நயாப் சிங் தேர்வு!

 
#BREAKING: ஹரியானா முதல்வராக நயாப் சிங் தேர்வு... இன்று மாலை பதவியேற்கிறார்!

இன்று காலை திடீரென ஹரியானா மாநில பாஜக மனோகர் லால், தனது அமைச்சரையை கூட்டோடு ராஜினாமா செய்திருந்த நிலையில், எம்.எல்.ஏ.க்களால் நயாப் சிங் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை முதல்வராக நயாப் சிங் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வருட கடைசியில் ஹரியானாவிற்கு சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், இன்று காலை பாஜக அமைச்சரவை கூட்டோடு ராஜினாமா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
ஹரியாணாவில் உள்ள 10 மக்களவைத் தொதிகளிலும் பாஜகவே போட்டியிட முடிவு செய்தது. இதனால், ஜனநாயக் ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளது.

#BREAKING: ஹரியானா முதல்வராக நயாப் சிங் தேர்வு... இன்று மாலை பதவியேற்கிறார்!

இதையடுத்து, ஆட்சி கவிழுவும் அபாயம் ஏற்பட்டதால் பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சற்று முன்னர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அமைச்சரவை ஆளுநரைச் சந்தித்து தங்களின் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில் புதிய முதல்வராக  நயாப் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை ஹரியானா மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web