பரபரப்பு.. இருசக்கர வாகனம் மீது அதிவேகத்தில் மோதிய கார்.. வைரலாகும் பகீர் வீடியோ..!

 
விபத்து
இருசக்கர வாகனம் மீது கார் மோதி நிற்காமல் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணல் மேட்டை அடுத்த சடையப்ப கவுண்டன்பட்டி அருகே 2 இரு சக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, அதே திசையில் பின்னால் வேகமாக வந்த கார் இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் சிதறி விழுந்தனர்.


அந்த கார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த ஒரு பெண் உட்பட 3 பேர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீஸார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில் வேகமாக பரவி வருகிறது.

From around the web