பரபரப்பு... வேங்கைவயலில் போராட்டத்தில் குதித்த விசிக... போலீசார் குவிப்பு!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தநிலையில் தமிழக அரசு வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய 3 பேர் மீது குற்றம்சாட்டி, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேங்கைவயலுக்குச் செல்லும் வழிகளில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உயா்நீதிமன்றத்தில் சிபிசிஐடி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் முரளி ராஜா, சுதா்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகிய மூன்று போ் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூவரும் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. பட்டியல் சமூகத்தினா் குடிக்கும் தண்ணீரில் மனிதக்கழிவு கலந்ததாகத்தான் வழக்கு. அந்த வழக்கில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்தவா்களே குற்றவாளிகள் என காவல்துறை கூறுவது அதிா்ச்சி அளிக்கிறது. இது ஏற்புடையதல்ல. எனவே, இந்த குற்றப் பத்திரிகையை விசாரணை நீதிமன்றம் ஏற்கக் கூடாது எனவும் மேல்விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய இந்த வழக்கை சிபிஐ விசாரணையிடம் ஒப்படைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் ஆகியோா் வலியுறுத்தி வருகின்றனா்.
பாதிக்கப்பட்ட மக்கள் மீதே வழக்கை திசை திருப்புவதாகவும், வேங்கைவயல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக விசிக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், வேங்கைவயல் கிராம பட்டியலினக் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் உள்ளேயே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேங்கைவயலுக்குச் செல்லும் அனைத்து வழிகளிலும் இன்று காலை முதல் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகை, ஊடகத்துறை உட்பட வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டியலின மக்கள் தங்களின் குடும்ப அட்டைகளை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டு தற்கொலையில் ஈடுபடுவோம் என போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!