பரபரப்பு.. பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியா - ஈரான் கபடி போட்டி..!
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா - ஈரான் அணிகளுக்கிடையிலான கபடி இறுதிப் போட்டி நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. இதில் நடுவர்கள் கொடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு அணி வீரர்களும் மாறி மாறி நடுவர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பான இறுதி கட்டத்தில் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Unreal drama at the Court of #Kabaddi in the Asian Games Final between India & Iran. 🇮🇳🇮🇷
— The CrickFun (@TheCrickFun) October 7, 2023
Poor umpiring, poor management, against the goodwill of this beautiful sport. These Asian Games have been disappointing in terms of officials.#AsianGamespic.twitter.com/B1MVpOWysW
சுமார் 20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. போட்டி முழுவதும் வீரர்கள்/பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே நிறைய வாக்குவாதங்கள் நடந்தன, இந்திய வீரர்கள் எழுந்து நிற்க மறுத்துவிட்டனர். இதனால் ஹாங்சோ மைதனாத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.
மேலும் என்ன முடிவை எடுப்பது என தெரியாமல் நடுவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
COMPETITION SUSPENDED🤯🤔
— The Bridge (@the_bridge_in) October 7, 2023
The men's #Kabaddi final between India and Iran has been suspended!
There were a lot of exchanges between players/coaches and officials throughout the match, the Indian players refused to stand up- Crazy things happening in Hangzhou.😶😵#AsianGames pic.twitter.com/Aa8ifkOIS8
போட்டி முடிய சில நிமிடங்கள் மட்டுமே உள்ள நிலையில் 20 நிமிடங்களுக்கும் மேலாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டியில் இறுதி முடிவில் எடுக்க முடியாமல் நடுவர்கள் திணறி வருகின்றனர்.