நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... குடிநீருக்காக பல கிமீ அலையும் அவலம்... 70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி நீரை பிடிக்கும் மக்கள்!

 
70 அடி ஆழக் கிணற்றில் இறங்கி நீரை பிடிக்கும் மக்கள்
மகாராஷ்டிரா மாநிலத்தில்  நாசிக் மாவட்டத்தில்  பெத் தாலுகாவிலுள்ள போரிச்சிவாரி கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை தீவிரமடைந்து வருகிறது. இதனையடுத்து  அப்பகுதி பெண்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, வெறும் சிறிய அளவு அழுக்கு நீரைத் திரட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் இச்சம்பவம் குறித்த  வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சில பெண்கள் கிணற்றை சுற்றி பாத்திரங்களுடன் காத்திருக்க, ஒருவர் கயிறு உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுப்பது தெரிகிறது.  
இதன்மூலம் அடிப்படை வசதியான தண்ணீருக்காக மக்கள் இன்னும் போராட வேண்டிய நிலைமை தான் நீடிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.   தேர்தல் நேரங்களில் அள்ளி வீசப்படும்  வாக்குறுதிகளில்  மக்கள் ஒரு சொட்டு குடிநீருக்காகவே தவிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  



நாசிக் மாவட்டத்தில் ஏராளமான கிராமங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தாக்கமடைந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள பல கிணறுகள் வறண்டுவிட்ட நிலையில், குடிநீருக்காக மக்கள் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டிய நிலை நீடிக்கிறது.  
தண்ணீர் பற்றாக்குறையை  சமாளிக்க, 2025ம் ஆண்டு பிப்ரவரியில் நாசிக் மாவட்ட நிர்வாகம் ரூ8.8 கோடி மதிப்பில் குடிநீர் விநியோகத் திட்டத்தை அங்கீகரித்தது. இதன் கீழ், கோடை காலங்களில் தேவைப்படும் கிராமங்களுக்கு டேங்கர் மூலம் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் கணக்கெடுப்பின் அடிப்படையில், 2025ம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் உள்ள 776 கிராமங்களில் புதிய கிணறு தோண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் ஏற்கனவே உள்ள வறண்ட கிணறுகளையே நம்பி உயிரை பணயம் வைத்து தண்ணீரைத் தேடி அலையும் நிலைமை நீடிக்கிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web