1000 ஆண்டுகளில் காணாத பெருவெள்ளம்!! 10லட்சத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்!!
டோக்சுரி சூறாவளி காரணமாக சீனாவின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பேய் மழை பெய்து வருகிறது. அதன் விளைவாக அந்நாட்டின் பீஜிங், ஹூபே, தியான்ஜின் மற்றும் கிழக்கு ஷான்சி உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி, ஊருக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
நகரின் சாலைகள், இருப்புப் பாதைகள் என அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதற்கிடையே, வெள்ள நீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
Severe floods in #Beijing after heavy rainfall, China#Flooding #flood #China #chinaflood pic.twitter.com/hOJ0dNjsEq
— World News (@WorldNews_1234) July 31, 2023
இதுவரை, 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அப்பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு, தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மழை வெள்ளத்துக்கு இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்ததால் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவிப்போர், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.மழை ஒரு பக்கம் சீனாவை புரட்டிப் போடுகிறது என்றால் மறுபக்கம் நிலநடுக்கமும் அந்நாட்டு மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. கிழக்கு சீனாவில் ஷாண்டாங் மாகாணத்தின் பிங்குயான் பகுதியை மையமாக வைத்து நேற்று கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவில், 5.5 ஆக பதிவானது. இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கின.
இதனால், அங்கு வசித்த மக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். அங்குள்ள 126 கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், 21 பேர் காயமடைந்தனர். பீஜிங், தியான்ஜென், ஹெனான், ஹெபெய் உள்ளிட்ட மாகாணங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதிகளில் ரயில் சேவைகளும் தடைபட்டன. மழையும் நில நடுக்கமும் மாறி மாறி சீனாவை மிரட்டி வருவதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?