தென்காசி, தூத்துக்குடியில் பரவலாக மழை... மக்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்றிரவு தென்காசியில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை தென்காசியிலும், தூத்துக்குடி மாநகர் பகுதிகளிலும் மீண்டும் பரவலாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். அதே போன்று நெல்லையிலும் இன்று காலை சுமார் 20 நிமிடங்களுக்கு மழை பெய்தது.
வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதே சமயம் நன்றாக வெயில் அடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென தூத்துக்குடியில் மழை பெய்ததால் உப்பளங்களில் மழை நீர் தேங்குவதால் உப்பு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!