தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை... இந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பா இருந்துக்கோங்க!

 
மழை

தமிழகத்தில்  அடுத்த இரு நாட்களில்  வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளில் இன்று வறண்ட வானிலையே நிலவக்கூடும். பொதுவாக காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது.  அதன் பிறகு ஜனவரி 28 மற்றும் 29  தேதிகளில் ‌ வறண்ட வானிலை நிலவக்கூடும். அத்துடன் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை

இதனையடுத்து ஜனவரி 30 ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது . அத்துடன் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி  மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். இதே போன்று ஜனவரி 31ம் தேதி கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் ஈரோடு  மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

மழை

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன்  காலை வேலையில் பனிமூட்டம் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web