தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று மாலை வரை மழைக்கு வாய்ப்பு!

 
மழை மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இன்று மதியம் மற்றும் மாலை நேரங்களில் சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இன்று மாலை 4 மணி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய  8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கன மழை

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வெப்பச்சலனம் மற்றும் வான்வெளி மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த திடீர் மழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் இன்று காலை முதலே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 31°C ஆகவும், உணரப்படும் வெப்பம் (Feels like) 37°C ஆகவும் உள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 12 மைல் வேகத்தில் தென்கிழக்கு திசையிலிருந்து வீசுகிறது. மழையின் காரணமாக மாலையில் வெப்பம் சற்று தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.