கடும் தண்ணீர் பஞ்சத்திலும் ஹோலி கொண்டாட்டமா? இது மட்டும் கூடவே கூடாது.. கர்நாடக அரசு கரார்!

 
பெங்களூரு

  பெங்களூரு நகரில் கோடை காலத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் ஹோலி பண்டிகைக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில், 'ஹோலி பண்டிகையின் போது, நீச்சல் குளங்களில் கொண்டாட, காவிரி நீரை பயன்படுத்த வேண்டாம்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்கை மழை போன்ற குழாய்களில் தண்ணீர் அடித்து நடனமாடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மறுபுறம், ஹோலி பண்டிகைக்கான கலாசார நிகழ்ச்சிகளுக்கு தடை இல்லை என்றும், தண்ணீர் பிரச்னையை சமாளிக்க அனைவரின் ஒத்துழைப்பும் முக்கியம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web