கொடூரம்... பெண்ணைக் கொலை செய்து சடலத்துடன் உடலுறவு கொண்ட சைக்கோ!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 50 வயது பெண்ணை கொடூரமாகக் கொலை செய்து, அவரது சடலத்துடன் உறவு கொண்ட 42 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது கொடூரச் செயலுக்குப் பிறகு பெண்ணின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசியதாகத் தெரிவித்துள்ளார்.

குற்றவாளி ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டிலும் இதேபோன்று ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கில் கைதாகித் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் மீண்டும் இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆற்றில் வீசப்பட்ட பெண்ணின் உடல் பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
