கொடூரம்... 7 மாத கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!
ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின் . இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணி. இந்த கர்ப்பம் குறித்த சந்தேகம் சச்சினுக்கு எழுந்த வகையில் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். தற்போது சினேகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் சச்சின் சினேகாவை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து அவரது வயிற்றில் அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கொடூரமாக கொலை செய்துள்ளார். வயிற்றில் ஓங்கி அடித்ததில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையும் வெளியே வந்து உயிரிழந்தது.

இதனையடுத்து கொலை சம்பவத்தை மறைத்து விபத்து நடந்தது போல காட்டுவதற்காக கேஸ் சிலிண்டரை கசிய வைத்துவிட்டு சச்சின் தப்பி ஓடினார். கேஸ் வாசனை அதிகமாக வந்ததால் அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு சினேகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சினேகா மற்றும் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
