இரண்டு மனைவிகளை கட்டிய கணவர்.. இரவில் தன்னந்தனியாக முடிவை தேடிக்கொண்ட சோகம்..!

 
கோவையில் ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை
ஆட்டோவில் இருந்துக்கொண்டே ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் புளியங்குடி அருகே மலையயடிக்குறிச்சியைச் சேர்ந்தவர் வெள்ளத்துரை. இவருக்கு வயது 50. வாசுதேவநல்லூரில் வசித்து வரும் இவர் சொந்தமாக ஆட்டோ வாங்கி அதை ஓட்டி சம்பாதித்து வருகிறார். இவருக்கு பார்வதி, உமா என்கிற இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி பார்வதி, தலைவன்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் உள்ளார். அவருக்கு திருமணமாகி விட்டது. 2-வது மனைவி உமா, திருப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப பிரச்சினைகள் காரணமாக மன உளைச்சலில் இருந்த வெள்ளத்துரை இரண்டு மனைவிகளையும் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவில் வெள்ளத்துரை தனது சொந்த ஊரான மலையடிக்குறிச்சிக்கு சென்றுள்ளார். அங்குள்ள குளத்தில் ஆட்டோவை நிறுத்தி, அதில் இருந்தவாறு மது அருந்திய அவர் திடீரென்று தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் ஆட்டோவுடன் தீப்பிடித்து எரிந்த அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

பின்னர் மறுநாள் காலை அவ்வழியே சென்றவர்கள் ஆட்டோவில் ஒருவர் உடல் கருகிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து புளியங்குடி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

From around the web