"நான் இந்தியாவின் மருமகள்.. என்னைப் போக சொல்லாதீங்க" காதலனுக்காக எல்லை தாண்டிய பாகிஸ்தான் பெண் கண்ணீர்!

காதலனைப் பார்ப்பதற்காக பாகிஸ்தானின் கராச்சி மாநிலத்தில் இருந்து தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்கு வந்துள்ள பெண், ‘நான் இந்தியாவின் மருமகள்... என்னைப் போகச் சொல்லாதீங்க’ என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் விசா சேவைகளையும் ரத்து செய்து, விசிட்டிங் விசாவில் இந்தியாவிற்குள் வந்தவர்கள் அனைவரையும் நாளைக்குள் திரும்பவும், சிகிச்சைக்காக வந்தவர்கள் செவ்வாய்க்கிழமைக்குள் திரும்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஸ்கிதானைச் சேர்ந்த சீமா ஹைதர் எனும் பெண், கடந்த 2023ம் ஆண்டு ஆன்லைன் கேமில் சந்தித்த தனது காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தார்.
சிந்து மாகாணம், கராச்சியில் இருந்து தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியா வந்த சீமா ஹைதர் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் தனது காதலன் சச்சின் மீனாவுடன் வசித்து வருகிறார். பல்வேறு விசாரணைகளுக்குப் பின் அவர் இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டார். சீமா ஹைதர் - சச்சின் மீனா ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் வெளியேற வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளதால், தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று சீமா ஹைதர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கூறிய அவர், "நான் பாகிஸ்தானின் மகளாக இருந்தேன். இப்போது நான் இந்தியாவின் மருமகள். நான் பாகிஸ்தானுக்குத் திரும்ப விரும்பவில்லை. எனவே, தயவுச் செய்து என்னை இந்தியாவில் தங்க அனுமதிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!