தேர்தலில் தோற்பவர்களை பாடையில் ஏற்றி மாலை போட்டு அனுப்பி வைப்பேன்... சீமான் சர்ச்சை பேச்சு!

 
இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

தமிழகத்தில் மே 18 கோவையில் நடைபெறவிருக்கும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான  களப்பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

சீமான்

கூட்டத்தில் உரையாற்றிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்கு அழைத்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து தான் போட்டி. 234 வேட்பாளர்களில் 134 பேர் இளம் வேட்பாளர்கள். 

திமுக எனும் தீமையை அதிமுக எனும் தீமையை வைத்து ஒழிக்க முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியில் நான் சொல்பவர்கள் தான் வேட்பாளர்கள். நான் சொல்வதற்கு மாறாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சியினர் விஜய் கட்சிக்கு சென்றுவிடுங்கள். 

சீமான்
விஜய் கட்சிக்கு செல்வதாக இருந்தால் கூறுங்கள் நானே சேர்த்துவிடுகிறேன்.சட்டமன்ற தேர்தலில் வெல்பவர்களை பல்லக்கில் ஏற்றி மாலை போட்டு அழைத்து வருவேன். தோற்பவர்களை பாடையில் ஏற்றி மாலை போட்டு அனுப்பி வைப்பேன். எப்படி இருந்தாலும் மாலை கன்ஃபார்ம், தோற்றுவிட்டால் சிறிது பால்டாயிலை குடித்துவிட்டு நீங்களே பாடையில் படுத்துவிடுங்கள்” என்றார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web