மருத்துவமனையில் அவசரச் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு 3 பேர் பலி!
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுரா பகுதியில் புகழ்பெற்ற தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.55 மணியளவில் எதிர்பாராத விதமாகத் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ மிக வேகமாகப் பரவியதால் அங்கிருந்த தீவிர அவசரச் சிகிச்சை பிரிவிலும் தீப்பிடித்துக் கொண்டு கரும்புகை சூழ்ந்தது.
தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அந்த அவசரச் சிகிச்சை பிரிவில் 15 முதல் 20 நோயாளிகள் வரை தங்கி சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. இந்த கோரமான விபத்தில் சிக்கி அங்கிருந்த நோயாளிகளில் 3 பேர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 15 பேர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாகப் பக்கத்தில் உள்ள வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பீகார் முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் உடனடியாக அறிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீ விபத்திற்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
