மாநில அரசு சுமுகமாக நடந்து கொண்டால், தமிழ்நாட்டிற்கான நிதி அதிகமாக கிடைக்கும் ... நயினார் நாகேந்திரன் பொளேர்!

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் , “நம்முடைய இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்று நாம் நடக்க வேண்டும். பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் அகில இந்திய தலைமை சொன்னதைத் தான் செய்ய வேண்டும். தவறான மீம்ஸ் போட்டால் அது நமக்கு எதிராக போய்விடும், எனவே எச்சரிக்கையாக மீம்ஸ்களை போட வேண்டும்.
இக்கட்சியை தமிழகத்தில் வளர்க்க தற்போதுள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் மாநில தலைவருமான எல்.முருகன் அவர்கள் வேல் யாத்திரை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சிபி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ரத யாத்திரை மூலம் இக்கட்சியை வளர்த்தார். அதேபோல் இக்கட்சியை வளர்க்க நாமும் பாடுபட வேண்டும். இப்பொழுது அமைந்துள்ள நம்முடைய கூட்டணி ஒரு உறுதியான கூட்டணி,நேர்மையான, இறுதியான கூட்டணி. எனவே இரட்டை இலையின் மேலே தாமரை மலர்ந்தே தீரும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு நாம் பாடுபட வேண்டும், அதற்காக பூத் கமிட்டியை நாம் வலுப்படுத்த வேண்டும், மத்திய அரசோடு, மாநில அரசு சுமுகமாக நடந்து கொண்டால், தமிழ்நாட்டிற்கான நிதி அதிகமாக கிடைக்கும்.
தமிழ்நாட்டிற்கு அதிக நிதியை பெற்றுத்தர உறுதியான நடவடிக்கை எடுப்போம். கச்சத்தீவு வேண்டுமென்றால் மோடி அவரிடம் தான் பேச வேண்டும், நீட் தேர்வு வரவே வராது என்கிறார்கள். நீட் தேர்வு குறித்தும் மேகதாது, தாது, மணல் போன்றவை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது மத்திய அரசிடம் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார். நம் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை மறந்து விட்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!