கோடி முறை ”கோவிந்தா ” நாமம் எழுதினா குடும்பத்தோடு விஐபி தரிசனம்!! திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!!

 
திருப்பதி விரைவு தரிசன டிக்கெட் பெற புதிய நடைமுறை!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. வருடத்தின் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.  திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் முதல் கூட்டம் தலைவர் கருணாகர ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இது குறித்து தேவஸ்தானம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  நாடு முழுவதும்  எல்.கே.ஜி. முதல் பட்ட மேற்படிப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும்.  

முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை என்ன செய்வது? திருப்பதி தேவஸ்தானம் பதில்..!!

அத்துடன் 25 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் "கோவிந்தா" நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வந்தால் அவர்கள் குடும்பத்தினருடன் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது. இதே போல 10 லட்சத்து 1,116 முறை கோவிந்தா நாமத்தை எழுதி வருபவர்கள்   ஒருவருக்கு மட்டும் வி.ஐ.பி. தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.  

திருப்பதி திருமலை பெருமாள்

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 பிரமோற்சவம் புரட்டாசி மாதத்தில் வருகிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் அதிகநேரம் காத்திருப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிரம்மோற்சவ விழாவில் வாகன சேவைகள் மிக சிறப்பாக நடத்தப்படும்.  திருப்பதியில் 1952ல் பக்தர்களுக்காக கட்டப்பட்ட   சத்திரங்கள் இடிக்கப்பட்டு  அந்த இடத்தில் ரூ.600 கோடியில் அதிநவீன வசதியுடன் 20,000 பக்தர்கள் தங்கும் அளவுக்கு   அச்சுதம் ஸ்ரீபாதம் என இரண்டு ஓய்வறைகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web