58 தொகுதிகளில்... 888 வேட்பாளர்கள்... 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்

இன்று காலை 6 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 
6-ம் கட்ட மக்களவை தேர்தலில் 889 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்கும் அரியானாவில் உள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்


மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தில் உள்ள 42 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. டெல்லியில் 7 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், அரியானாவில் 10 தொகுதிகளிலும், பீகார் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 8 தொகுதிகளிலும், ஒடிசாவில் 6 தொகுதிகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.  காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இன்று மாலை 6 மணிக்கு நிறைவடையும்.