”தானா சேர்ந்த கூட்டம்” பாணியில் மோசடி கும்பல் வருமானவரி சோதனை!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
தானா சேர்ந்த கூட்டம்

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யா நடிப்பில்  'தானா சேர்ந்த கூட்டம்'  படம் வெளியானது பெரும் வரவேற்பை பெற்றது இந்த திரைப்படத்தில் சூர்யா தலைமையிலான குழு பெரும் பணக்காரர்கள் வீட்டில் போலியான வருமான வரிசோதனை நடத்தி பணத்தை சுருட்டுவதாக காட்சிகள் அமைந்திருந்தன.  அதேபோல் ஒரு சம்பவம் உண்மையிலேயே தலைநகர் டெல்லியில் நடந்து பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம்

ஆனால் அந்த மோசடி கும்பலுக்கு பணம் கிடைப்பதற்கு பதில்   அவர்கள் போலீசில் சிக்கிக்கொண்டனர். டெல்லியின் ஜனக்புரி பகுதியில் வசித்து வரும் பெரும் தொழிலதிபர் குல்ஜித் சிங். பெரும் கோடீஸ்வரரான இவரது வீட்டில் ரூ.400 முதல் ரூ.500 கோடி இருப்பதாக வருமான வரித்துறை ஊழியராக பணிபுரிந்து வரும்  தீபக் காஷ்யப்புக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில்  தீபக் காஷ்யப் தனது நண்பரான போலீஸ் ஏட்டு குல்தீப் சிங்குடன் கூட்டு சேர்ந்து, தொழிலதிபர் வீட்டில் போலி வருமான வரி சோதனை நடத்தி பெரும் தொகையை சுருட்ட திட்டம் தீட்டினார்.  அதன்படி ஒரு பெண் உட்பட 7 பேர் கொண்ட கும்பல் வருமான வரித்துறை அதிகாரிகள் போல  வேஷமிட்டு தொழிலதிபர் குல்ஜித் சிங் வீட்டுக்குள் நுழைந்தனர்.  

தானா சேர்ந்த கூட்டம்

குல்ஜித் சிங் வீட்டில் இருக்கும்போது சோதனை நடத்தினால் தான் அவரை மிரட்டி ரூ,10 முதல் ரூ.15 கோடி சுருட்ட முடியும் என திட்டம் தீட்டியிருந்தனர்.  அவர்கள் சென்ற நேரத்தில் குல்ஜித் சிங் வீட்டில் இல்லாததால் பணம் எதுவும்கிடைக்கவில்லை. உடனடியாக  அந்த மோசடி கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.  குல்ஜித் சிங் வீட்டிற்கு வந்ததும் விஷயம் தெரிந்து உடனடியாக  போலீசில் புகார் அளித்தார்.   அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது போலியான வருமான வரி சோதனை நடத்தப்பட்டது அப்பட்டமானது. தொழிலதிபரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மோசடி கும்பல் அடையாளம் காணப்பட்டது. இதன்படி  போலீஸ் ஏட்டு குல்தீப் சிங், வருமான வரித்துறை ஊழியர் தீபக் காஷ்யப் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில்  தலைமறைவாகி இருக்கும்  ஒரு பெண் உட்பட 2 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web