வெல்லப் போவது யார்?இந்தியா-நியூஸி. முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடக்கம்!!

 
வெல்லப் போவது யார்?இந்தியா-நியூஸி. முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில்  தொடக்கம்!!


இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இன்று கான்பூரில் தொடங்க உள்ளது. காலை 9.30 மணி அளவில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டியில் அறிமுக வீரராக இடம் பெறுகிறார்.

வெல்லப் போவது யார்?இந்தியா-நியூஸி. முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில்  தொடக்கம்!!

20 ஓவர் தொடரில் நியூசிலாந்து தோல்வியை தழுவியது.தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த போட்டிகள் உத்தரபிரதேசத்தில் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்திய கேப்டன் விராட் கோஹ்லி முதலாவது டெஸ்டில் கலந்து கொள்ளவில்லை. ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். லோகேஷ் ராகுல் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடி வரும் 26 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் இந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக கலந்து கொள்கிறார்.

வெல்லப் போவது யார்?இந்தியா-நியூஸி. முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில்  தொடக்கம்!!

கடந்த பிப்ரவரியில் உள்ளூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அக்‌ஷர் பட்டேல் 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார். இதில் இங்கிலாந்தை இரண்டே நாட்களில் மொத்த விக்கெட்டுகளையும் கைப்பற்றி காலி செய்திருந்தனர். முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் கோப்பையை கோட்டை விட்ட இந்திய அணிக்கு அதற்கு பதிலடி கொடுக்கும் முயற்சியில் இருக்கும்.

From around the web