இந்தியா போர் புரிய தயங்காது… மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆவேசம்!

 
ராம்தாஸ் அத்வாலே

இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில்  26 சுற்றுலாப் பயணிகள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய சமூக நீதித்துறை அமைச்சருமான  ராம்தாஸ் அத்வாலே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நான் கண்டிக்கிறேன். காஷ்மீர் பாகிஸ்தான் வசம் உள்ளவரை பயங்கரவாத நடவடிக்கைகள் தொடரும். இவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே வழியாகத்தான் இந்தியாவிற்குள் வருகை தருகின்றனர்.  

ராம்தாஸ் அத்வாலே

இதனால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரை இந்தியா தன்வசம் கொள்ள வேண்டும். காஷ்மீரை நம்மிடம் ஒப்படைக்கவில்லை எனில்  அவர்களுக்கு எதிராக நாம் போரை அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் அப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் இல்லை என்றால் இந்தியா போர் புரிய தயங்காது. மத்திய அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக உள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகளும் எங்களுடன் துணை நிற்க வேண்டும்.

ராம்தாஸ் அத்வாலே

தேவைப்படும்போது தேசத்திற்காக நிற்க வேண்டும் என்பது அம்பேத்கர் தமக்கு கற்றுக் கொடுத்த பாடம். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்யப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு செல்ல தொடங்கியிருந்தனர். காஷ்மீர் தேர்தலில் வாக்குப்பதிவு 60 சதவீதமாக அதிகரித்தது. பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைக்கவில்லை. முஸ்லிம்களும், காஷ்மீர் மக்களும் பெரும் சோகத்தில் உள்ளனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web