காதலியை கரம் பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!

 
நவ்தீப் சைனி

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர்  நவ்தீப் சைனி தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார்.

கடந்த 2019இல் டி20 போட்டியில் முதல் முறையாக இந்திய அணியில் களமிறங்கினார் நவ்தீப் சைனி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் டெல்லி அணிக்காக விளையாடினார். இந்த தொடரில் டெல்லி அணி அரையிறுதி வரை தகுதி பெற்று வெளியேறியது. ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக முதல் முறையாக விளையாடிய சைனி, கடந்த மே மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடைசியாக 2021ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது நடைபெற்ற டெஸ்ட் தொடரில், பிரிஸ்பேனில் நடந்த கடைசி டெஸ்டில் விளையாடினார். 

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் இந்திய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி. இவர் தனது நீண்ட நாள் காதலியான ஸ்வாதி ஆஸ்தானா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். நவ்தீப் சைனி தனக்கு திருமணமான தகவலை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் முதல் வீரர்கள் வரை அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காதல் மனைவி ஸ்வாதி ஆஸ்தானாவுடன், கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி

அந்த பதிவில்,   " உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் அன்புக்குரிய நாளாகவே அமைகிறது. வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க முடிவு செய்துள்ளோம். எங்களது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் முன் அனைவரின் அன்பையும், ஆசீர்வாதத்தையும் எதிர்நோக்கிகுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

From around the web