இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய எம்எல்ஏ கைது!

 
அமினுல் இஸ்லாம்
இந்தியாவில் ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய  தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.   இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அஸ்ஸாம் எதிர்க்கட்சி எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஸ்ஸாம் மாநிலத்தின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சி சார்பில் திங் தொகுதியில் போட்டியிட்டு 3வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அமினுல் இஸ்லாம்.

அமினுல் இஸ்லாம்

இவர், பஹல்காம் தாக்குதலும் புல்வாமா தாக்குதலும் மத்திய அரசின் சதித்திட்டம் எனவும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தும் பேசிய காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில், தேசத் துரோக பிரிவுகளின் கீழ் இஸ்லாம் மீது வழக்குப் பதிவு செய்த அஸ்ஸாம் காவல்துறையினர், நாகோன் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

இது குறித்து  அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, "பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதுகாக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில்  எம்எல்ஏ அமினுல் இஸ்லாமின் பேசிய விடியோக்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.  

அமினுல் இஸ்லாம்
மேலும், இஸ்லாமின் கருத்துக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை எனவும் , இத்தகைய சூழலில் எங்கள் கட்சி அரசுக்கு துணையாக நிற்கும் எனவும்  அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் மௌலானா பதருதீன் அஜ்மல் தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!