சீனாவுக்கு இந்தியா கொடுத்த பலத்த அடி... கதறும் முதலீட்டாளர்கள்!

 
செல்போன்

செல்போன் தயாரிப்பில் சீனாவுக்கு இந்தியா பலத்த அடி கொடுத்துள்ளது அந்நாட்டு முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சீனா, செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நாடாக இருந்து வந்த நிலையில், தற்போது கொரோனா கால கட்டத்திற்கு பின்னர், கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே சமயம் செல்போன் தயாரிப்பில் தற்போது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. 

செல்போன் உற்பத்தி நிறுவனம்

உலகளவில் செல்போன் உற்பத்தி மற்றும் அதற்கான உதிரிப் பாகங்கள் தயாரிப்பு ஏற்றுமதியில் இத்தனை வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்து, தற்போது சீனாவை செல்போன் தயாரிப்பில் பெரும் பின்னடைவைச் சந்திக்க செய்துள்ளது. 

தற்போது சீனாவிலிருந்து உதிரிப்பாகங்களை வாங்குவதை இந்தியா பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது. சீனாவை புறந்தள்ளிவிட்டு வியட்நாம், அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து ‘சிப் செட்’ களை பெற இந்தியா திட்டமிட்டுள்ளது. 

இதன் காரணமாக, சீனாவின் செல்போன் உற்பத்தி தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி, இந்திய அரசு பிஎல்ஐ திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிப்பதால், பல பெரிய சிப் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கியுள்ளன. இதன் காரணமாகவும் சீனாவின் செல்போன் உற்பத்தியானது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் சீனாவின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான ‘செமிகண்டக்டர் மேனுஃபேக்ச்சரிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் (SMIC)’ பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. நான்காவது காலாண்டில் இந்நிறுவனம் 55 சதவீத இழப்பை சந்தித்துள்ளது. இதற்கு, உலகளாவிய தேவை குறிப்பாக இந்திய வணிகத்தில் அதன் தேவை மிகவும் குறைந்துள்ளது காரணமாகக் கூறப்படுகிறது. இதுபோல சீனாவின் பல முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web