ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்வு!! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!!
வங்கிகள் நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ஆக்சிஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 14 முதல், மூத்த குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளுக்கான வைப்பு தொகைக்கு 8.05% வரை வட்டியை வழங்குகிறது.மற்ற வாடிக்கையாளர்களுக்கு, 7.3% வட்டியை வழங்குகிறது. இந்த வட்டி விகிதங்கள் ரூ. 2 கோடிக்கு குறைவான கால டெபாசிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மற்றொரு முன்னணி வங்கியான பெடரல் வங்கியும் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி 15 ஆகஸ்ட் 2023 முதல் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட காலகட்டங்களுக்கு மூத்த குடிமக்களுக்கான நிலையான விகிதத்தை விட 77 அடிப்படை புள்ளிகளை வங்கி கூடுதலாக வழங்குகிறது.
ஆக்சிஸ் வங்கி பெடரல் வங்கியை தொடர்ந்து கனரா வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12 முதல், கனரா வங்கி மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டியை வழங்குகிறது. பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25% வட்டியை வழங்கி வருகிறது. அதே போல எஸ்.எஸ்.எப்.பியும் ஆகஸ்ட் 7 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதன் 5 ஆண்டு காலத்திற்கான நிலையான வைப்பு தொகைக்கு 8.60% வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு, சிறு நிதி வங்கி 4.50% முதல் 9.10% வட்டி விகிதத்தை வழங்குகிறது.
பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதால் மற்ற சில முன்னணி வங்கிகளும் விரைவில் வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!