கலக்கத்தில் சர்வதேச பயணிகள் ... பாகிஸ்தான் வான்வெளித் தடையால் விமானக்கட்டணம், பயண நேரம் அதிகரிப்பு?!

மேலும், வட மாநிலங்களில் இருந்து செல்லும் சர்வதேச விமானப் பயணத்தில் நேரம் இரண்டு மணிநேரத்துக்கு மேல் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. இந்தியா ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிந்து நதி நீர் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்தது.மேலும், தூதரக ரீதியில் பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் சிம்லா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழையத் தடை விதித்திருப்பதாக நேற்று வியாழக்கிழமை மாலை அறிவித்தது.
இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்காவுக்கு வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி உட்பட வடமாநிலங்களில் இருந்து வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டால் அரபிக் கடலுக்கு மேல் நீண்ட தொலைவுக்கு சுற்றுச் செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.பல நூறு கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப் பாதையில் செல்ல வேண்டிய சூழல் நிலவுவதால், விமானங்களின் கட்டணம் 8 முதல் 12 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், பயண தூரம் அதிகரிக்கும் சூழலில் விமானத்தின் எரிபொருள் அதிகளவில் நிரப்ப வேண்டியது அவசியமாகிறது. இதன்காரணமாக பயணிகள் எண்ணிக்கை, பயணிகளின் சுமை போன்றவற்றை குறைக்க வேண்டிய சூழல் நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ஏற்படும் செலவினங்களை ஈடுசெய்யும் வகையில் விமானத்தின் கட்டணம் அதிகரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், சென்றுசேரும் இடத்துக்கு ஏற்ப பயண நேரமும் 2 முதல் 3 மணிநேரம் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மற்றும் இந்திய நிறுவனங்களால் இயக்கப்படும் விமானங்கள் மட்டுமே பாகிஸ்தான் வான்வெளி தடத்தை பயன்படுத்த முடியாது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற பிற நாடுகளில் இருந்து அந்த நாட்டுக்கு சொந்தமான அரசு அல்லது தனியார் விமான நிறுவனங்களால் இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய விமான நிறுவனங்களுக்கு பாகிஸ்தான் அரசு வான்வெளி தடையை இதற்கு முன்பே விதித்திருந்தது. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பிப்ரவரி 2019 ல், இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாலகோட்டில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, இந்திய விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த சில மாதங்களுக்கு பாகிஸ்தான் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!