திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை!

 
திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றத்தில்  அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் மாட்டுக் கறி சாப்பிட்டதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த விவகாரம் குறிந்து இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் நேற்றும், இன்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை

இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

திருப்பரங்குன்றம்


இந்நிலையில், திரு​ப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.  திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி அமைப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு 144 தடை உத்தரவு போடப்பட்டது. இந்நிலையில், முன்னெச்சரிக்கையாக திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி 800க்கும் மேற்பட்ட போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web