தேர்தல் அட்ராசிட்டி: கோழிப்பண்ணையில் ஐடி ரெய்டு ... ரூ.32 கோடி பறிமுதல்!

 
போலீஸ்

பொள்ளாச்சியில் உள்ள பிரபல கோழிப்பண்ணையின் தலைமை அலுவலகம் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சாவேலம்பட்டியின் வெங்கடேச காலனியில் இதன் தலைமையகம் உள்ளது.

 

நெய்வேலி சிட்பண்டு, நிதி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை

 

இந்நிலையில், வருமான வரித்துறை அதிகாரி சக்திவேல் தலைமையிலான குழுவினர், அவர்களது அலுவலகம், பண்ணை உள்ளிட்ட நான்கு இடங்களில் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இதுவரை, அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 32 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி 32 கோடி பறிமுதல்

மேலும் சோதனைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ரூ.32 கோடி பாதுகாப்பு காரணங்களுக்காக பொள்ளாச்சியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web