30 அடி உயரம்.. 300 டன் எடை... ஆசியாவிலேயே மிக பெரியது... இன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

 
திருவாரூர்

இன்று காலை ஆசியாவின் மிகப் பெரிய தேரானா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் ஆழித்தேரோட்டம் இன்று நடைப்பெறுகிறது. 30 அடி உயரம், 30 அடி அகலத்தில் 300 டன் எடையுடன் தேர் ஆடி அசைந்து வருவது கண்கொள்ளாக் காட்சி.

இன்று ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று முதலே பக்தர்கள் திருவாரூரில் குவிந்தனர். ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும் அந்த வகையில் நடப்பாண்டில் ஜனவரி 25ம் தேதி பந்தக்கால், பிப்ரவரி 27ம் தேதி கொடியேற்றம், இன்று மார்ச் 21ம் தேதி விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது.  

விடுமுறை

ஆழித்தேரில் தியாகராஜசுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்றிரவு  அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக  தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேரில் இருந்தவாறே தியாகராஜருக்கு இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இன்று காலையும் சிறப்பு பூஜைகளைத் தொடர்ந்து காலை 8.50 மணிக்கு ஆழித்தேர் வடம்பிடித்து இழுக்கப்படும். ஆழித்தேருக்கு முன் விநாயகர், சுப்ரமணியர் தேர்கள் காலை 5 மணிக்கு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஆழித்தேர் இதற்கு பின் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம்பிடித்து இழுக்கப்பட உள்ளன.

உத்தரபிரதேச போலீஸ்

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செய்துள்ளன. விழாவை முன்னிட்டு திருவாரூரில் 2000  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆழித்தேரோட்ட விழாவையொட்டி இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

தேரோட்டத்தின் போது கூட்டத்தை கண்காணிக்க தெற்கு வீதி, வடக்கு வீதி, மேற்கு வீதி, கீழ வீதி ஆகிய இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web