அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி உயர்வு!

 
அரசு ஊழியர்கள்
  

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு விரைவில் வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.  இதில் சீனியர் ஊழியர்களுக்கு சுமார் ரூ1.90 லட்சம்  வரை நிதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம்  ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு பலன் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 46 சதவிகிதமாக உள்ள டிஏ 50 ஆக உயர்ந்துள்ளது.

அரசு வேலை
அதே போல்  பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிமுறைகள் மாற்றப்பட உள்ளன.  தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பென்ஷனுக்கு கொடுக்க வேண்டும் இதில்  அரசாங்கத்தின் பங்களிப்பு 14% .  பழைய ஓய்வூதிய முறையானது ஒரு பணியாளரின் கடைசி ஊதியத்தில் 50%  நிலையான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளித்தது. இப்போது புதிய முறையால் கடைசி ஊதியத்தில் 38% என்னவோ.. அந்த அளவிற்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும் எனத் தெரிகிறது. அதன்படி ஊழியர்கள் கடைசியாக வாங்கிய வருமானத்தில் 40-45 சதவிகிதம் பென்ஷனாக கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற உள்ளனர்.

அரசு ஊழியர்கள்


மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து எச்ஆர்ஏ உயர்வும் இருக்கலாம் எனத் தெரிகிறது.  தற்போது எக்ஸ், ஒய், இசட் என்று மூன்று பிரிவுகளில் எச்ஆர்ஏ சம்பளம் தரப்படுகிறது. இவை முறையே 27 சதவிகிதம், 18 சதவிகிதம், 9 சதவிகிதம் ஆகும். இந்நிலையில்  எல்லா பிரிவிற்கும் தலா 3 சதவிகிதம் உயர்வு இருக்கலாம் எனத் தெரிகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு டிஏ உயர்வு 4 சதவிகிதம் வரை இருக்கும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 
மார்ச் முதல் வாரம் டிஏ உயர்வு அறிவிக்கப்பட்டதன் பிறகு தேர்தலை முன்னிட்டு அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்போது  பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள்  அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய  அரசு இனிவரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

From around the web