அறுவை சிகிச்சைக்குப் பின் கோவை திரும்பிய ஜக்கி வாசுதேவுக்கு உற்சாக வரவேற்பு!

 
ஈஷா


டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சத்குரு ஜக்கி வாசுதேவ், அறுவை சிகிச்சைக்கு பின்னர், இன்று கோவை திரும்பிய நிலையில், அவருக்கு விமான நிலையத்தில் பூங்கொத்துகளை கையில் ஏந்தியபடி ஈஷா ஆதரவாளர்களும், சீடர்களும் உற்சாக வரவேற்பளித்தனர். 

சத்குரு


ஈஷா யோக மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த சில வாரங்களாகவே கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த மார்ச் 17ம் தேதி டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் ஆபத்தான அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு  மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக சத்குரு ஜக்கியின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டது . இதனையடுத்து கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

சத்குரு


இந்நிலையில், இன்று டெல்லியில் இருந்து அறுவை சிகிச்சைக்குப் பின்னர், கோவை திரும்பிய ஜக்கி வாசுதேவ்வை வரவேற்க கோவை விமான நிலையத்தில் ஈஷா ஆதரவாளர்களும், அவரது சீடர்களும் குவிந்தனர். கோவை வந்திறங்கிய ஜக்கி வாசுதேவ்வுக்கு பூங்கொத்துக்களுடன் அவர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web